எதிர்காலப் பொறியியலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாள்ரகள், பங்குபற்றுனர்களுக்கு ரெபோட்டிக் துறைக்கும் அப்பால் குழுப்பணி மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் SLIIT இன் பொறியியல் பீடத்தின் மின்னியல் மற்றும் மின்னியல் பொறியியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ROBOFEST 2022’ வருடாந்த போட்டி அண்மையில் முடிவுக்கு வந்தது.
SLIIT இன் மாலபே கம்பஸ் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றானது பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்ளின் விளையாட்டுக்கான மூலோபாயம், வடிவமைப்பு, மற்றும் புத்திசாலித்தனம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
இலங்கையில் இடம்பெறும் முன்னணி ரொபோட்டிக் போட்டியாக SLIIT ROBOFEST அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சாதனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பங்கேற்பாளர்கள் போட்டியிட்டமை இந்த வருடம் விதிவிலக்காக அமையவில்லை. இந்தப் போட்டியாது இளையவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் சார் திறன்களை வெளிப்படுத்துவதற்கு இணையற்ற தளமாகவும் அமைந்தது.
பாடசாலைப் பிரிவானது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான நுழைவுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், சாதாரணமான ரோபோட்டைத் தயாரிக்குமாறும், காணொளியொன்றைச் சமர்ப்பிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வழிப்படுத்தல் மற்றும் வழிகாட்டல்களுடன் கூடிய தொழில்நுட்ப ஆவணமொன்றை வழங்கியிருந்தனர். இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்கு 38 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
பாடாசலைகளுக்கான பிரிவில் முதலாவது இடம் நுகேகொட சென்.ஜோசப் கல்லூரியின் ‘Trojan 22’ இற்கு முதலாவது பரிசும், கம்பஹா தக்ஷிலா கல்லூரியின் ‘Line Follower Bot’ இற்கு இரண்டாவது இடமும், அம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையின் ‘Sinon’ இற்கு மூன்றாவது இடமும் கிடைத்தன. குருநாகல் மளியதேவ கல்லூரியின் Ralphy Boy அணி மற்றும் டி.ஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த ‘Ultra’ மற்றும்‘CYBERNOTS DSS’ ஆகிய அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
பிரதான பரிசுகளுக்கு இலங்கை ரோபோட்டிக் நிறுவனம் (SLIR) அனுசரணை வழ்கியிருந்ததுடன், Magicbit நிறுவனம் ஆறுதல் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கியிருந்ததுடன், MEU Labs தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தது.
செப்டெம்பர் 25 முதல் 26ஆம திகதி வரை பல்கலைக்கழகப் பிரிவுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழகப் பிரிவுக்குக் கடுமையான போட்டிகள் நிலவியிருந்தபோதும் விருதுகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதும் இப்பிரிவுக்கான பிரதான விருதுகளுக்கு F Zone 24/7 நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், ஆறுதல் பரிசு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ‘Team C’ இற்கு வழங்கப்பட்டது.
ழுசயபெந மற்றும் ACCELR ஆகியவற்றினால் தளத்துக்கான அனுசரணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்வதற்கும் SLIIT இன் பொறியியியல் பீடம், ஊடகப் பிரிவு மற்றும் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பிரிவின் SLIIT மாணவர்கள் பங்களிப்புச் செலுத்தியிருந்தனர்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக ROBOFEST 2022 இல் பங்குபற்ற ஆர்வமாகவிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களுக்கு தகவல்தரும் செயலமர்வுகள் மற்றும் வெபினார்களை SLIIT ஏற்பாடு செய்திருந்தது. இந்த செயலமர்வுகள் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஈர்த்திருந்ததுடன், நாட்டில் ரோபோட்டிக்கிற்கான சுற்றுச்சூழலை விஸ்தரிப்பதற்குத் தேவையான பலம்பொருந்திய செயற்கை நுண்ணறிவு மற்றும் ரொபோட்டிக் சமூகத்தை உருவாக்க பங்குபற்றுனர்களுக்கு உதவியாக இருந்தன.
போட்டியை ஆரம்பிப்பதற்கு முன்னரான ஆர்வத்துக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலமர்வுகள் அமைந்தன. சந்தலங்கா மத்திய கல்லூரி, மாத்தறை சென்.தோமஸ் கல்லூரி ஆகியவற்றில் செயலமர்வுகள் நடத்தப்பட்டதுடன், இலங்கை ரொபோட்டிக் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரொஷான் பிரேமரத்ன ஒன்லைன் வெபினார்களுக்கு வளவாளராக இணைந்துகொண்டார். பங்குபற்றியவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகக் கருவிகளைப் பயன்படுத்தியிருந்தனர்.
ROBOFEST 2022 இன் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. அன்டன் ஹெட்டியாராச்சி இந்தப் போட்டி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “பங்குபற்றியவர்கள் அனைவரும் மகத்தான படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர். எதிர்காலத்தில் பொறியியலாளர்களாவதற்குத் தேவையான திறன்களைக் பெற்றுக் கொண்டதுடன், அதற்கான ஆர்வத்தைம் வெளிப்படுத்தியிருந்தனர். ROBOFEST 2022 இன் அசாதாரணமான வெற்றியாளர்கள் மற்றும் இதில் பங்குபற்றிய திறமையான போட்டியாளரகள் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். மாணவர்கள், ஏற்பாட்டாளர்கள், அனுசரணையாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் இணையற்ற ஒத்துழைப்பால் இந்தப் போட்டி மறக்கமுடியாத தெற்றியாகப் பதிவாகியுள்ளது” என்றார்.
SLIIT இன் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் திணைக்களத்தின் தலைவரும், உதவிப் பேராசிரியருமான கலாநிதி நிம்சிறி அபேசிங்ஹ குறிப்பிடுகையில், “எமது சமூகத்தில் கண்டுபிடிப்பாளர்கள் தேவையாக உள்ளனர். பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய எதிர்காலத் தலைவர்களின் திறமையை வெளிக்காட்டுவதாக ROBOFEST 2022 அமைந்தது. ரொபோட்டிக்ஸை கொண்டுவந்த குழுக்கள் மற்றும் ரெபோட்டிக் சமூகத்தில் உள்ள மாணவர்களினதும் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு மற்றும் ஆர்வம் என்பன ஊக்கமளிக்கும் அனுபவமாக இருந்தன. அவர்கள் முன்னேறவும், திறன்களைப் பெறவும், அவர்களின் எதிர்காலத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் செல்வதற்கும் இந்தப் போட்டி உதவியாகவிருந்தது” என்றார்.