Eyeview Sri Lanka

கலா ​​பொல 2025

Share with your friend

இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொல, 32ஆவது ஆண்டாக 2025 பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு 07 (கிரீன் பாத்) இல் உள்ள ஆனந்த குமாரசாமி மாவத்தையில் ஆரம்பமானது. இந்நிகழ்வு ஏராளமான கலை ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களை ஈர்த்தது.

1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையினால் கருத்தாக்கம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, 1994 முதல், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தொடர்ச்சியான அனுசரணை மற்றும் செயற்படுத்தல் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொள்வனவாளர்களுடனும் கலை சமூகத்துடனும் ஓவியர்கள், சிற்பிகள் உள்ளிட்ட காட்சிக் கலை கலைஞர்கள் இணைவதற்கான நாட்டின் மிகப்பெரிய தளத்தை வழங்குகிறது. இது ஒரு சந்தையாகவும் உரையாடல்கள், அறிவு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான இடத்தை வழங்கும் இடமாகவும் திகழ்கிறது. நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமையையும் அது மேம்படுத்துகிறது.

இவ்வருட நிகழ்வில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 390 இற்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ விழாவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கலை அரங்குகளைப் பார்வையிட்ட அவர், கலைஞர்களுடனும் உரையாடினார். இந்த நிகழ்வானது, சிறுவர்களுக்கான கலைப் படைப்பு பகுதி, இளம் கலைஞர்களுக்கான பட்டறை, நேரடி ஓவிய அமர்வு, கலை பற்றிய பேச்சு மற்றும் கலாசார பொழுதுபோக்கு ஆகியவற்றால்மேலும் கலகலப்பாக அமைந்திருந்தது.


— END—

ஊடகங்களுக்கான ஏனைய முக்கிய தகவல்கள்:


Share with your friend
Exit mobile version