பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது இலங்கையில் முதல் தடவையாக மிகவும் உள்ளடக்கிய, சமமான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கல்வி முறையை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு மைல்கல்லினை குறிக்கும் வகையில் நடத்திய இலங்கை கல்வி கருத்தரங்கு 2025 ஆனது கல்வித் தலைவர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் சக்திவாய்ந்த ஓன்றுகூடலிற்கான தளத்தை வழங்கியது. இந்த கருத்தரங்கில் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பணியாற்றும் கௌரவப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரைகளை பங்கேற்பாளர்கள் செவிமடுக்கும் வாய்ப்பினை பெற்றனர்.

“கல்வியில் ஒத்துழைப்பு, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமத்துவம்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்ட இந்த கருத்தரங்கானது, மூலோபாய உரையாடல் மற்றும் யோசனைப் பகிர்வுக்கான ஒரு தளத்தை உருவாக்கியது. இலங்கை மற்றும் அதற்கு அப்பால் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், அபிவிருத்தி பங்குதாரர்கள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் ஆகியோர் அனைவருக்கும் உள்ளடக்கிய மற்றும் தரமான கல்வி முறைமையை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்தனர். உள்ளடக்கிய மற்றும் சமமான ஆங்கிலக் கல்வி, இருமொழி அறிவுறுத்தலை வலுப்படுத்துதல் மற்றும் கற்பவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் டிஜிட்டல் கருவிகளை அளவிடுதல் ஆகியவை இக்கருத்தரங்கில் முக்கிய கருப்பொருள்களாக அமைந்தன.
பிரிட்டிஷ் கவுன்சிலின் தெற்காசியாவின் கல்வி, கலை மற்றும் ஆங்கில பணிப்பாளர் கேட் ஜோய்ஸின் ஆரம்ப உரை, பகிரப்பட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாளுக்கான தொனியை அமைத்தது. பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், தனது சிறப்புரையில்,கல்வி பங்குடைமைகளுக்கான ஐக்கிய ராஜ்யத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ், வீடியோ செய்தி மூலம் பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றியதுடன் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்கான தீர்வுகளை இணைந்து உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ மற்றும் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலம் மற்றும் பாடசாலைக் கல்வித் தலைவர் அஞ்சு மோசஸ் ஆகியோரின் உள்ளடக்கிய கல்வி குறித்த உயர்மட்ட உரையாடல், கருத்தரங்கிற்கு நெகிழ்ச்சியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொனியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சமாக, கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், ஆங்கிலக் கல்வியானது சமூக இடைவெளியின் அடையாளமாக இல்லாமல், வாய்ப்பை வழங்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் அவர் உள்ளடக்கிய மற்றும் தகவல் தொடர்புக்காக ஆங்கிலக் கற்பித்தலை வளர்ச்சியடையச் செய்வது, ஆசிரியர் பயிற்சியை நவீனமயமாக்குவது, டிஜிட்டல் அணுகலை விரிவுப்படுத்துவது மற்றும் சமூக மற்றும் புவியியல் எல்லைகளில் சமமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 2026 ஆம் ஆண்டிற்கான நடைமுறை சீர்திருத்தங்களை கோடிட்டுக் காட்டினார். அவரது உரையானது சமத்துவம் வாய்ந்த எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கம், அபிவிருத்தி பங்குதாரர்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
கருத்தரங்கில் இடம்பெற்ற இரு குழு கலந்துரையாடல்களும் தேசியக் கொள்கையானது வகுப்பறைகளில் அர்த்தமுள்ள தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதையும், பொது-தனியார் பங்குடைமைகள் எவ்வாறு இவ்விடயத்தில் புதுமைகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் ஆராய்வதாக அமைந்திருந்தன.
‘உள்ளடக்கிய கல்விக்கான வழிநடத்தல்’ என்ற முதலாவது குழு கலந்துரையாடலில், கொள்கை மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளடக்கிய கற்பித்தலை எவ்வாறு ஆதரிக்கின்றன, மற்றும் சமத்துவ இடைவெளிகளைக் குறைக்கின்றன என்பது தொடர்பாகவும் மேலும் டிஜிட்டல் உள்ளகக் கட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்துகின்றன என்பது தொடர்பாகவும் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர். இரண்டாவது குழு கலந்துரையாடலில் , ‘கல்வி பாதைகளை மீள்பரிசீலனை செய்தல்’, மொழி உள்ளடக்கம், டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் நெகிழ்வான கற்றல் மாதிரிகள் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, மாணவர்களை ஒரு மாறும் தன்மைமிகுந்த எதிர்காலத்திற்கு சிறப்பாக தயார்படுத்துவதாக அமைந்திருந்தது.
இக்கருத்தரங்கில் இடம்பெற்ற ஒரு சக்திவாய்ந்த மாணவர் உரையானது, கற்பவர்கள் மாற்றத்தின் முகவர்கள் என்பதை பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டும் வகையில், இளைஞர்களின் குரல்களை முன்னணிக்குக் கொண்டு வந்தது. கம்பஹாவின் ரத்னாவளி பாலிகா மகாவித்தியாலயத்தை சேர்ந்த தேனுலி அல்பிட்டிய (வயது 13), ஆசிரியர்களுடன் இணைந்து இலவச மற்றும் இருமொழிக் கல்வியானது எவ்வாறு தனது பயணத்தை வடிவமைக்க உதவியது என்பதைப் பகிர்ந்து கொண்டதுடன் இது உள்ளடக்கிய மற்றும் ஆதரவான கல்வி முறைமையின் உண்மையான மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
“இந்த கருத்தரங்கானது சிந்தனைகளை ஒன்றிணைத்தல் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கான ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. விரைவாக மாறிவரும் உலகில் வளர்ச்சியடையத் தேவையான அடிப்படை மற்றும் மாற்றத்தக்க திறன்களைக் கொண்டதாக ஒவ்வொரு கற்பவரையும் தயார்படுத்தும், உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கல்வி முறையை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் கல்வித் துறை முழுவதும் முக்கிய குரல்களை ஒன்றிணைப்பதாக உள்ளது .நீடித்த தாக்கத்தை உருவாக்கவும், எந்த கற்பவரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்யவும், அரசாங்கம் , பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் முழுவதும் பங்குடைமையுடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவே கூறினார்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கை கல்வி கருத்தரங்கானது, ஒத்துழைப்பு, பகிரப்பட்ட கற்றல் மற்றும் நடைமுறை நடவடிக்கைக்கான இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான பங்குதாரர்களை இணைப்பது, புத்தாக்கமான நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது மற்றும் நீடித்த, அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான வரைபடத்தை இணைந்து உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது..அதன் மையத்தில் உள்ளடக்கிய, தகவமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக்கூடிய மற்றும் ஒவ்வொரு கற்பவரையும் உலகமயமாக்கப்பட்ட உலகத்திற்கு தயார்படுத்தும் வகையிலான கல்வி முறைமைக்கான தொலைநோக்குப் பார்வை உள்ளது.
“கல்வியை முன்னேற்றுவதில் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வலிமையைப் பிரதிபலிக்கும் இந்த முக்கியமான கருத்தரங்கை நாம் நடத்துவதில் பெருமை கொள்கிறோம். அர்த்தமுள்ள, நீண்டகால பங்குடைமைகள் மூலம் ஆங்கில மொழி கற்றல், புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கிய கல்வியை ஆதரிப்பதற்காக தேசிய பங்குதாரர்களுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் உறுதிபூண்டுள்ளது. இந்தக் கூட்டு முயற்சிகள் மூலம்தான் நிலையான மாற்றத்தையும் தாக்கத்தையும் நாம் ஏற்படுத்த முடியும்” என்று கேட் ஜாய்ஸ் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கானது, உள்ளடக்கத்தை ஒரு சிந்தனையாக மட்டும் கொள்ளாது, ஒவ்வொரு வகுப்பறையிலும் பன்முகத்தன்மையுடன் செயல்படுத்தல் மற்றும் கொள்கை தீர்மானம் என ஒன்றிணைந்த நடவடிக்கைக்கான அழைப்புடன் நிறைவடைந்தது. இந்த கலந்துரையாடல்கள் ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் இடைவெளி மற்றும் மொழி சார்ந்த குறைபாடு போன்ற செயல்படுத்தல் சவால்களை எதிர்கொள்வது முதல் தொழில்நுட்பத்தை இலக்குடன் பயன்படுத்துவது வரை, சீர்திருத்தத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சமத்துவம் உட்பொதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தின. இலங்கையின் எதிர்காலத்தை கருதும்போது, பங்கேற்பாளர்கள் 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான திறன்களை வளர்ப்பதற்கான மாற்றத்தை வலியுறுத்தினர், மேலும் மாணவர் குரலை மையமாகக் கொண்டு அமைப்பு முழுவதும் பகிரப்பட்ட உரிமையால் அர்த்தமுள்ள மாற்றம் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.