Eyeview Sri Lanka

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசெல பெரஹர 2022ற்கு பீப்பிள்ஸ் லீசிங் அனுசரணை

Share with your friend

Advertisements

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்), இலங்கையின் பிரமாண்டமான மற்றும் வரலாற்று மத விழாக்களில் ஒன்றான கண்டி எசெல பெரஹெரவிற்கு அண்மையில் அனுசரணை வழங்குகிறது. “பல்லின் திருவிழா” என்று அழைக்கப்படும் எசல பெரஹெரா, புத்தபெருமானின் புனிதமான பல்லுக்குக்கு மரியாதை செலுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

பிஎல்சியின் பிரதம முகாமையாளர் (மீட்புகள் – மத்திய பிராந்தியம்) சமன் லியனகே ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலாவிடம் அனுசரணையை கையளித்தார். பிஎல்சியின் கண்டி கிளையின் முகாமையாளர் சேனக முனசிங்க உடனிருந்தார். 

பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையில் நம்பகமான வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இது அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும், இது நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றாகும். பீப்பள்ஸ் லீசிங் 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு, நிறுவனம் 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்று, பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதிய சக்தியாக வளர்ந்துள்ளது. 


Share with your friend
Exit mobile version