இவ்வருடம் வணிக உலகத்தில் 60 ஆண்டுகளைக் கொண்டாடும் தேசத்தின் கூரைத் தகடுகள் முன்னோடியாகத் திகழும் றைனோ, தனது ஊழியர்களின் நம்பிக்கையை வென்று Great Place to Work® என்ற கூடுதல் ஒப்புதலையும் பெற்றுள்ளது. சிறந்த பெருநிறுவன குடிமகனாக உயர்ந்து திகழும் நிறுவனம், இப்போது சிறந்த பணி கலாச்சாரத்துடன் மதிப்பு சார்ந்த நிறுவனமாக மேலும் அங்கீகரிக்கப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற 24ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2020/21 இல் பெறுமதி சேர்க்கப்பட்ட தாதுப்பொருட்கள் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக பாராட்டுக்கள் பெற்ற றைனோ, ஆறு தசாப்தங்களில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாளராக நாட்டில் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மே மாதத்தில் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 100% இலங்கை நிறுவனமானது பல தசாப்தங்களாக சந்தையில் சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தியது. மேலும், தரமான கூரை தயாரிப்புகளுக்கான தேவையை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்கு மூலோபாய ரீதியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் இன் முகாமைத்துவப் பணிப்பாளர் E. J. ஞானம், நிறுவனம் அடைந்துள்ள மைல்கல் மற்றும் பெற்ற அங்கீகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு சிறந்த பெருநிறுவனக் குடிமகனாக 60 வருடங்களைக் கொண்டாடும் தருணத்தில் நாம் பணிபுரிய சிறந்த இடத்திற்கான Great Place to Work அங்கீகாரத்தைப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறோம். எமது மறைந்த தவிசாளர் தேசமான்ய A. Y. S. ஞானத்தின் 100வது ஜனன தினத்தினை கொண்டாடும் இந்த மே மாதத்தில், அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கும் நிறுவனமான நமது கலாச்சாரத்தின் நேர்மறையான செல்வாக்கு மற்றும் சரியான விழுமியங்களை பிரதிபலிக்கும் இந்த முக்கிய மைல்கல்லுடன் இணைந்து எங்கள் நிறுவனத்தில் எங்கள் ஊழியர்களின் நம்பிக்கை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.
ஜூன் 2022 இல், 60வது ஆண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, றைனோவுக்கு Great Place to Work பட்டம் வழங்கப்பட்டது. Great Place to Work® நிறுவனம், ஊழியர்களுக்கான பணியிட அனுபவத்தின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யும் வலுவான மதிப்பாய்வு முறையைப் பின்பற்றி, அவர்கள் செயல்படும் சந்தையில் சிறந்த தொழில்வழங்குநர்களை அங்கீகரிக்கிறது. அதன் அடிப்படையில், இலங்கையில் தொழில் புரிவதற்கு சிறந்த இடமாக இருப்பதற்கு தேவையான உலகளாவிய மதிப்பீட்டு தரங்களை றைனோ பூர்த்தி செய்துள்ளது.
“அவர்களின் மனித வளத்தை மேம்படுத்த முயற்சிசெய்யும் ஏனைய உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வதற்கு, றைனோ ரூஃபிங் முயல்கிறது. பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கி, முறையாக கவனித்துக் கொள்வதன் பயனாக ஊழியர்களுக்கு நிறுவனம் மீது அளப்பரிய உரிமை உணர்வு உருவாகுகின்றது. அது செயல்திறனை முதன்மைப்படுத்தும் கலாச்சாரத்தை சாத்தியப்படுத்தும் அதே வேளையில் நிறுவன விழுமியங்கள் மற்றும் நிரவத்தினதும் ஊழியர்களினதும் நலன்களைப் பாதுகாக்க செயல்படுத்துகிறது. எங்கள் 60 ஆண்டுகால பாரம்பரியத்தை நாட்டு எல்லைகளுக்கு அப்பால் சென்று சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும்போது, தொழில்துறை அளவுகோல்களுக்கும் அப்பாற்பட்ட உயர் தரங்களை நாங்கள் அமைத்துள்ளோம். தரம், மீள்தன்மை மற்றும் நாணயம் எனும் எங்கள் முக்கிய மதிப்புகள் எங்களை வேறுபடுத்துகின்றன. நாங்கள் செயல்படுத்தும் உயர்தர நிபுணத்துவம் மற்றும் எங்கள் மறைந்த தவிசாளர் மூலம் கிடைத்த நற்பெயர் ஆகியவை காலத்தின் தேவையாக நின்று தொடர்ந்து எங்களை வழிநடத்தும்.” என ஞானம் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் கூட றைனோ தனது பணியாளர்களை நன்று கவனித்துக் கொள்ள எப்போதுமே தவறவில்லை. இதன் விளைவாக நிறுவனத்தின் மீது ஊழியர்களுக்கு அதிக விசுவாசம் காணப்பட்டது. இது, சவாலான நேரங்களிலும் நிறுவன செயல்திறனை உந்தியது. Great Place to Work நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்புக்கு சாதகமாக பதிலளித்ததன் மூலம், பணியாளர்கள், நிறுவனத்தின் மீதான தங்கள் விசுவாசத்தையும் நன்றியையும் வெளிப்படையாக தெரிவித்தனர்.