Site icon Eyeview Sri Lanka

Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் இலங்கையில் அறிவிக்கப்பட்டனர்

Share with your friend

இவ்விழாவில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து இலங்கையின்  மாணவர்களின் சாதனைகள் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய விழாவில் அறிவிக்கப்பட்டனர். விழாவில் அரசு, தனியார் அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் இங்கிலாந்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விருதுக்காக நடுவர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் பெறுநர்களைத் தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலைத்தன்மை, கலாசாரம் மற்றும் படைப்பாற்றல், சமூக நடவடிக்கை, வணிகம் மற்றும் புத்தாக்கம் என்பனவே அவையாகும். விருது பெற்றவர்கள் வர்த்தக வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூகத் தலைவர்கள் என அவர்களின் சிறந்த சாதனைகளுக்காகவும், இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்புக்காகவும் அங்கீகரிக்கப்பட்டனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்களினால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கூறுகையில், ‘இங்கிலாந்து  மாணவர் விருதுகள் இலங்கையில்  மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடுகின்றன. இவர்களின் பங்களிப்புகள், நம்பமுடியாத திறமை, உந்துதல் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் இறுதிப் போட்டியாளர்கள், UK மாணவர்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அவர்கள் செய்த சிறந்த சாதனைகளுக்கு மட்டுமல்ல, UK கல்வியின் மாற்றத்தக்க தாக்கத்திற்கும் சான்றாகும்’ என்று தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கூறுகையில், ‘இன்று, இங்கிலாந்து கல்வியின் மூலம் பெற்ற திறன்கள், அறிவு மற்றும் அனுபவங்கள் மூலம் தங்களைச் சுற்றியுள்ள உலகில் செல்வாக்கு செலுத்தும் நபர்களின் சாதனைகளை நாங்கள் நினைவுகூருகிறோம். இந்த ஆண்டு விருது வழங்கும் விழா, UK மாணவர்களின் பல்வேறு திறன்கள் மற்றும் முயற்சிகளையும் எடுத்துக்கூறுகிறது. மேலும் இது எங்கள் வெற்றியாளர்களான இலங்கையின் எதிர்காலத் தலைவர்களின் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளின் கொண்டாட்டமாகும்.

இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது UK உயர்கல்வி மற்றும் உலகெங்கிலும் உள்ள UK மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. இப்போது அதன் பத்தாவது ஆண்டில், கிட்டத்தட்ட 100 நாடுகளில் இருந்து 140 க்கும் மேற்பட்ட UK உயர் கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1,450 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று, இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

UK மாணவர் விருதுகளில் இந்த ஆண்டு இலங்கையில் வெற்றிபெற்றவர்கள்:

வணிகம் மற்றும் புத்தாக்கம்: செல்வி. லிஷ்னி திலகரத்ன, வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம்.

விஞ்ஞானம் மற்றும் நிலைத்தன்மை: கலாநிதி மொஹமட் ரிஷார்ட் மொஹமட் ரியால், டண்டீ பல்கலைக்கழகம்

சமூக நடவடிக்கை: செல்வி. பூர்ணிமா மீகம்மன, நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகம் நியூகேஸில் மற்றும் டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

கலாசாரம் மற்றும் படைப்பாற்றல்: செல்வி. லங்கா பண்டாரநாயக்க, போர்ன்மவுத் பல்கலைக்கழகம்

இலங்கையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான UK படிப்புக்கான மாணவர் விருதுகளுக்கான இறுதிப் போட்டியாளர்கள்:

வணிகம் மற்றும் புத்தாக்கம்: செல்வி. லிஷ்னி திலகரத்ன, திரு. அமீர் சாலி மற்றும் திரு. சுஷான் பீரிஸ்

விஞ்ஞானம் மற்றும் நிலைத்தன்மை: கலாநிதி மொஹமட் ரிஷாட் மொஹமட் ரியால், கலாநிதி டோலுவீர சச்சித் மெத்தானந்தா, மற்றும் கலாநிதி இரேஷா அத்தநாயக்க

கலாசாரம் மற்றும் படைப்பாற்றல்: செல்வி. லங்கா பண்டாரநாயக்க, திரு எரந்த எஹெலேபொல, கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க

சமூக நடவடிக்கை: செல்வி பூர்ணிமா மீகம்மன, கலாநிதி மதுர திவங்க பத்திரன, மற்றும் கலாநிதி பனங்கலகே டோனா ஹேமமாலி டயஸ் குணதிலக


Share with your friend
Exit mobile version