நிறுவனம், இலங்கையின் போராட்ட விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் ஆரம்பித்து, தனித்துவமான “Unleash” என்ற போராட்ட விளையாட்டு மேம்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்துகிறது.

Unleash, கிராப்ளிங், மூவாய் தாய், மற்றும் கலப்பு போராட்டக் கலை (MMA) ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கை நாட்டை உலகளாவிய போராட்ட விளையாட்டு மேடையில் ஒரு முக்கிய போட்டியாளராக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் விளையாட்டுத் துறையில் நீண்டகால இடைவெளியை நிரப்புவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போராளிகளை வளர்ப்பதும், சர்வதேச அளவில் அவர்களுக்கு வெளிப்பாடு அளிப்பதன் மூலம் நாட்டின் போராட்ட விளையாட்டு பற்றிய புரிதலை மாற்றியமைப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில்முறை தளத்தை உருவாக்குகிறது.
முதல் நிகழ்வான “Unleash Absolute Warriors Season 1” ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் உள்ள ராயல் MAS அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 28 போராளிகள் 14 உயர்தர போட்டிகளில் பங்கேற்பார்கள். இலங்கை, இந்தியா, மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, மற்றும் குருநாகலை பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மைய அரங்கை அலங்கரிப்பதுடன் இலங்கைக்கான பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
Unleash நான்கு போராட்ட விளையாட்டு ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் கசுன் டி சில்வா (உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தோல்வியடையாத MMA போராளி), பிரசாந்த வனிகசூரிய (சிரேஷ்ட தொழில்முனைவோர்), ஷமைல் அன்னம் (வல்லுநர்), மற்றும் ஷாஸின் அன்னம் (MMA ஆதரவாளர்) ஆவார்கள்.
தனது கருத்துக்களைப் பகிர்ந்த கசுன் டி சில்வா, “Unleash ஒரு நிறுவனத்தை விட பெரியது: இது ஒரு கலாச்சார மறுசீரமைப்பு. இது வெறும் போட்டிகளைப் பற்றியது மட்டுமல்ல – இது ஒழுக்கம், மாற்றம், மற்றும் உலகளாவிய போராட்ட விளையாட்டு மேடையில் தங்கள் முத்திரையை பதிக்க விரும்பும் திறமையான இலங்கையர்களுக்கு வாய்ப்பை உருவாக்குவது பற்றியது. உலகளாவிய தொழில்துறை 9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புடையது, இலங்கை இதில் தனது பங்கைப் பெறுவதற்கு இதுவே சரியான தருணம். ‘திரை நேரத்திலிருந்து உடற்பயிற்சி நேரத்திற்கு’ இளைஞர் கலாச்சாரத்தை மாற்றும் பணியுடன், Unleash இலங்கையில் விளையாட்டு மற்றும் சமூகத்தில் ஒரு வலிமையான சக்தியாக மாற உள்ளது.”
Unleash விரிவாக்கத் திட்டங்களும் வெளியிடப்பட்டன. Season 2, 2026 ஜனவரி மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ளது. மேலும் Season 3 இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த முயற்சியின் பிராந்திய லட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நேர்காணல்கள், ஊடக கூட்டாண்மைகள், அல்லது நிகழ்வு விபரங்களுக்கு, media@unleashcombat.com மற்றும் @unleashcombat மூலம் தொடர்பு கொள்ளவும்.
-முடிவு-