தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, SLIoT Challenge 2020 and IESL RoboGames 2020 நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. Internet of Things (IoT) மற்றும் robotics போன்றவற்றில் புத்தாக்கத்தை அறிமுகம் செய்து, இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்பத் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியிருந்தது. அண்மையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது போட்டியின் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
SLIoT Challenge 2020 மற்றும் IESL RoboGames 2020 என்பது SLT-MOBITEL, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் (IESL) கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பிரிவின் இணைந்த முயற்சியாக அமைந்திருந்தது. இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதன் பெறுமதியை கவனத்தில் கொண்டும், புதிய தலைமுறை தொழில்நுட்ப கொள்கைகளை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டும், தொடர்ச்சியான நான்காவது ஆண்டாகவும் இந்த நிகழ்வுக்கு SLT-MOBITEL அனுசரணை வழங்கியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்ப புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இரு போட்டிகளும் அமைந்திருப்பதுடன், எதிர்கால சிந்திக்கும் ஆற்றலை பெற்றுக் கொடுத்து, எதிர்காலத்தை இணைப்பில் வைத்திருப்பதை கொண்டமைந்திருக்கும்.
தற்போதைய தொற்றுப் பரவலின் அடிப்படையில் ‘Overcoming COVID-19 with IoT’ எனும் தலைப்பில் 77 சமர்ப்பிப்புகளை The SLIoT Challenge 2020 இல் பெறப்பட்டது. IoT இல் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் துரிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதனை SLT-MOBITEL பின்பற்றுகின்றது. இலங்கை இளைஞர்களுக்கு IoT போட்டியை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை SLT-MOBITEL உணர்ந்துள்ளதுடன், மாணவர்களுக்கு IoT இல் தமது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது. நாட்டில் டிஜிட்டல் மாற்றியமைப்பு புரட்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல கைகொடுக்கும் திறவுகோலாக அமைந்துள்ளது.
IoT மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அறிவூட்டல், கல்விசார் மற்றும் விழிப்புணர்வூட்டும் போட்டி முன்னெடுக்கப்பட்டது. இதில் narrowband IoT (NBIoT) போட்டியும் பங்குபற்றுநர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது.
பட்டப்படிப்பு பிரிவில் SLIoT Challenge 2020 இல் முதலிடத்தில் வெற்றியீட்டிய அணியாக Eureka Innovations திகழ்ந்தது. Kaspers மற்றும் Wewingo ஆகியன இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டன. திறந்த பிரிவில் ANANKE முதலிடத்தைப் பெற்றது. Enet மற்றும் Proactive Ants ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டன.
IESL RoboGames 2020 என்பது, இலங்கையில் மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது robot போட்டியாக அமைந்திருந்தது. போட்டியாளர்களுக்கு opensource Webots Robot Simulator (https://www.cyberbotics.com) கட்டமைப்பில் 3D maze-like arena இல் அமைக்கப்பட்ட இயங்கும் Robot களை கட்டமைப்பதற்கு கோரப்பட்டனர். மொத்தமாக 23 பாடசாலை அணிகள் மற்றும் 48 பல்கலைக்கழக அணிகள் IESL RoboGames 2020 போட்டிகளுக்கு தம்மை பதிவு செய்திருந்தன. இதில் 4 பாடசாலை அணிகள் மற்றும் 8 பல்கலைக்கழக அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.
IESL RoboGames பல்கலைக்கழக பிரிவில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மூன்று அணிகள் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு போட்டியிட்டிருந்தன. வெற்றியீட்டிய அணியாக Circuit Breakers தெரிவாகியிருந்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை Robo Sapiens மற்றும் Pitch Black ஆகியன பெற்றுக் கொண்டன. பாடசாலைகள் பிரிவில் மலியதேவ கல்லூரியின் Trix அணி வெற்றியீட்டியிருந்ததுடன், ரோயல் இஸ்ரிடியுட் Robo Sapiens மற்றும் தக்ஸிலா மத்திய கல்லூரியின் TRC Team 1 ஆகியன இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டன.
கவர்ச்சிகரமான பணப் பரிசுக்கு மேலதிகமாக, இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய சகல வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் இலவச SLT-Mobitel Home 4G புரோட்பான்ட் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. சகல போட்டிகளும் மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், போட்டியாளர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் தமது திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
முன்னைய போட்டிகளில் வெற்றிகரமாக இயங்கியிருந்ததை தொடர்ந்து, இலங்கையில் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால புத்தாக்கங்கள் போன்றவற்றுக்கு வலுவூட்டுவதில் SLT-MOBITEL தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தியிருந்தது. SLIoT சவாலினூடாக SLT-MOBITEL க்கு விண்ணப்பங்களுக்கு தொழில்நுட்ப புத்தாக்கங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிறந்த களம் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், நுகர்வோரின் மத்தியில் அசல் IoT மற்றும் அதனுடன் தொடர்புடைய விருத்திகளுக்கு வழிகோலப்பட்டிருந்தது.
இளைஞர்கள் மத்தியில் robotics பிரிவில் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் IESL RoboGames க்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
SLIoT Challenge 2020 மற்றும் IESL RoboGrames 2020 ஆகியன SLT-MOBITEL இன் அடுத்த தலைமுறை Fibre optic புரோட்பான்ட் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்பட்டிருந்ததுடன், தேசத்தின் Fibre இணைப்பாக அமைந்துள்ளது.