முதியோர் பராமரிப்புச் சேவையில் புகழ்மிக்கதும் முதன்மையானதுமான நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் தெற்காசிய உயர் வணிக விருது – 2025 விருது விழாவில் சுகாதாரச் சேவை முகாமைத்துவப் பிரிவின் சிறந்த சமூக நல உதவியாளர் எனும் விருதை வென்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகரின் தலைமையில் கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்ற விருது விழாவில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சமில நுவன்பிடிய, கணக்காளர் சுசந்த விஜேரத்ன, வதிவிட முகாமையாளர் மஹேஷ் அரனாயக்க ஆகியோர் மேற்படி விருதை பெற்றுக்கொண்டனர். இதற்கு முன்னரும் ரோயல் நர்சிங் ஹோம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ளதோடு 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 07 விருதுகளை வென்றுள்ளதன் மூலம் சுகாதாரத் துறையில் ரோயல் நர்சிங் அடைந்துள்ள முன்னேற்றம், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர் நம்பிக்கை, தரம் மற்றும் சந்தை தலைமை செவ்வனே பிரதிபலிக்கின்றது.

2007 ஆம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் தற்பொழுது இலங்கையின் மிகப் பெரிய தாதியர் சேவை வழங்குநராக தடம் பதித்துள்ளது. மஹரகம, கல்கிஸ்ஸ, கடுவளை, மாலபே, நீர்கொழும்பு மற்றும் ஹங்வெல்ல போன்ற பகுதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரிலும் சொகுசு பராமரிப்புச் சேவை நிலையங்களை நடாத்தி வரும் ரோயல் நர்சிங் ஹோம் அதன் ஸ்தாபகத் தலைவர் மனுஜ ஹேவாவசத்தின் தலைமையில் மருத்துவர்கள், தாதியக் கண்காணிப்பாளர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 1600 இற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்ற அதி நவீன வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு ஆகச் சிறந்த சேவையினை வழங்குமொரு சுதேச நிறுவனமாகும். இலங்கை தனியார் சுகாதாரச் சேவை ஒழுங்குப்படுத்தல் சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் ISO 9001-2015 சர்வதேச தரச் சான்றிதழை வென்ற இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனமாகும்.




