இலங்கையின் ஆடைத் துறையை நிலைத்தன்மை,புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் மூலம் மேம்படுத்துதல்

Share with your friend

இலங்கையின் ஆடைத் திறமை நீண்ட காலமாக ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது — நெறிமுறை உற்பத்தி, திறமையான கைவினை மற்றும் உறுதியான விநியோக சங்கிலிகளுக்காக உலகளவில் பெயர் பெற்றது. இப்போது, உலக சந்தைகள் நிலைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூகப் பொறுப்பு நோக்கி விரைவாக மாறும்போது, இலங்கை மீண்டும் திட்டவட்டமாக முன்னேறுகிறது.

சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், சர்வதேச வணிக மையம் (ITC) உடனான கூட்டு முயற்சியில், ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி சபை (SLEDB) ஆகியன இலங்கையில் உலக ஜவுளி மற்றும் ஆடை (GTEX) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. 2024 முதல் 2027 வரை, இந்த முயற்சி நிலைத்தன்மை, வட்ட-பொருளாதாரம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழிலாளர் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை (T&C) தொழிலை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

தொழில்துறைக்கான ஒரு மாற்றத்தைத் தரும் முன்னேற்றம்

சுற்றுச்சூழல் மற்றும் சமூக தரநிலைகள் குறித்து வளர்ந்து வரும் ஒழுங்குமுறை மற்றும் வாங்குபவர் தேவைகளுடன், உலக ஆடைத் துறை ஒரு புதிய முன்மாதிரி மாற்றத்தை அனுபவிக்கிறது. GTEX இரண்டாம் கட்டம், இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (SMEs) குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி திறன் கொண்டவர்களுக்கு இந்த புதிய சவால்களுக்கு பதிலளிக்க உதவுகிறது. நடைமுறை பயிற்சிகள், நிபுணர் மேற்பார்வைகள் மற்றும் சந்தை அணுகல் வசதிகள் மூலம், பங்கேற்கும் நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கவும், வணிக மாதிரிகளை உருவாக்கவும், சர்வதேச சந்தைகளில் மிகவும் திறம்பட்ட விதத்தில் போட்டியிடவும் கற்றுக்கொள்கின்றன.

JAAF உறுப்பினராக உள்ள முன்னணி நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளித்து வருகின்றன. சிறந்த செயல்பாடுகளைப் பகிர்ந்துகொண்டும், சுத்தமான மற்றும் திறமையான உற்பத்தி முறைகளைத் துறைமுழுவதும் ஏற்க ஊக்குவித்தும் வருகின்றன.

“எமது கவனம் மதிப்புச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் வணிகத்தை எதிர்காலத்திற்கு உகந்ததாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ளது” என்று JAAFஇன் செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறினார். “நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் சந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், இலங்கையை வருங்காலத்தில் பொறுப்பான ஆடை உற்பத்தியில் ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துகிறோம்.” என தெரிவித்தார்.

இணக்கத்திற்கும் போட்டித்திறனுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்தல்

இந்த திட்டத்தின் முக்கிய வலிமைகளில் ஒன்று, நடைமுறை முடிவுகளில் கவனம் செலுத்துவதாகும். நீர் மற்றும் ஆற்றல் திறன் மேம்பாடு, ஜவுளி கழிவு நிர்வகிப்பு, அல்லது சர்வதேச சூழல்-சான்றிதழ் தரநிலைகளுடன் இணைதல் போன்றவற்றில் வழங்கப்படும் ஆதரவு, நிலைத்தன்மையை வணிக ரீதியாக இலாபகரமானதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. GTEX II சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு சிக்கலான இணக்க வழிகளில் வழிநடத்துகிறது.

“GTEX திட்டம், பொது மற்றும் தனியார் துறை உள்ளாட்சிகளை ஒன்றிணைத்து, நிலைத்தன்மை வழியாக உண்மையான பொருளாதார வாய்ப்புகளை வெளிக்கொணர்கிறது” என்று ITCஇன் நார், ஜவுளி மற்றும் ஆடைப் பிரிவு தலைவர் Matthias Knappe கூறினார். “இது நீண்டகால போட்டித்திறனுக்கான திறன்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய SDG-களுக்கும் பங்களிக்கிறது.” என தெரிவித்தார்.

மக்களில் முதலீடு மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல்

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை (T&C) நாட்டின் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் முதன்மைத் துறைகளில் ஒன்றாகும். GTEX II இந்த வலிமையை அடிப்படையாகக் கொண்டு, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வளர்ச்சியை முன்னெடுக்கிறது. நிறுவனங்கள் இத்துறையில் பெண்களுக்கான தலைமை மற்றும் தொழில்நுட்ப திறன் வளர்ச்சியில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன: பரவலாக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் போன்ற நெகிழ்வான வேலை மாதிரிகளை விரிவாக்குதல், பாதுகாப்பான, சமத்துவமான பணியிடங்களை உருவாக்குதல் இதில் அடங்கும்.

JAAFஇன் ஒத்துழைப்புடன், இந்தத் திட்டம் தொழிற்சாலைகளுக்கிடையே அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. நவநாகரீக வடிவமைப்பாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) மற்றும் கைவினைஞர்களை இணைத்து, வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலியை (value chain) உருவாக்குகிறது.

நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல்

தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தாண்டி, GTEX II நீண்டகால சுற்றாடல் மேம்பாட்டில் (ecosystem development) முதலீடு செய்கிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் போன்ற பயிற்சி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகள், பாடத்திட்டங்களில் நிலைத்தன்மை (sustainability) மற்றும் வட்ட-பொருளாதாரக் (circularity) கருத்துகளை ஒருங்கிணைத்தல், JAAF மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி சபை உள்ளிட்ட தொழில் சங்கங்களை வலுப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒத்துழைப்பு கொள்கைகளுக்கு வாதிடுதல் ஆகியன அடங்கும்.

“தேசிய ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாக, உலக சந்தைகளின் மாறிவரும் தேவைகளை சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) சந்திக்கும் திறனை வளர்ப்பதில் மிகப்பெரிய மதிப்பை நாங்கள் காண்கிறோம்” என்று இலங்கை ஏற்றுமதி வளர்ச்சி சபையின் (EDB) ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் மங்கள விஜேசிங்கே கூறினார். “ITC மற்றும் JAAF உடனான எங்கள் கூட்டுணைவு, இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் போட்டித்திறன் மட்டுமல்லாது – இணக்கமான, இணைக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்திற்கு தயாரானவர்களாக இருக்க உறுதி செய்கிறது.” என தெரிவித்தார்.

உலகளாவிய இலக்குகளுக்கான கூட்டு உறுதிப்பாடு

அதன் மையத்தில், இந்தத் திட்டம் இலங்கையின் ஐ.நா. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான (SDGs) உறுதிப்பாட்டுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது—இதில் கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, பொறுப்பான நுகர்வு, காலநிலை நடவடிக்கை மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை அடங்கும்.

இலங்கையின் ஆடைத் துறை உலகின் நம்பிக்கையையும், புத்தாக்கத்தையும், நிலைத்தன்மையையும் தொடர்ந்து ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்காக, JAAF தனது பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு, இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்குவதில் பெருமை கொள்கிறது.


Share with your friend