இலங்கையிலிருந்து 2024 பொதுநலவாய புலமைப்பரிசில் பெற்றுச் செல்லும் அறிஞர்களுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய விளக்கக்கூட்டம்

Share with your friend

2024 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அறிஞர்கள் குழுவினருக்கு, அவர்கள்  புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்த வேளையில் ​​அவர்களுக்கு ஒன்றோடொன்று தொடர்புபட்ட மற்றும் தகவலறிந்த புறப்பாட்டிற்கு முன்னரான விளக்கவுரையை இலங்கையின் பிரிட்டிஷ் கவுன்சில் வெற்றிகரமாக நடத்தியது. பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அறிஞர்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள அந்தந்த பல்கலைக்கழக பகுதிகளுக்கு  சுமூகமான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக ஐக்கிய இராஜ்யம் பற்றிய பெறுமதியான தகவல்கள், குறிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவுகள்  என்பன வழங்கப்பட்டன.

செப்டம்பர் 2004 இல் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகளுடன் பொதுநலவாய  அறிஞர்கள் புறப்படுதல்

பொதுநலவாய  புலமைப்பரிசில்கள்  ஐக்கிய இராஜ்யத்தில்  உள்ள பொதுநலவாய  புலமைப்பரிசில்  ஆணைக்குழுவினால் (CSC) உலகளாவிய அரங்கிலும் அவர்களின் சொந்த நாட்டிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட திறமையான நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ரீதியில் சுமார் 800 மாணவர்களுக்கு ஐக்கிய இராஜ்ஜிய  பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. 1960 முதல், CSC ஆனது 31,000 தனிநபர்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தில் படிக்கவும் திறன்களைப் பெறவும், அறிவைப் பெறவும் மற்றும் உலகளாவிய வளர்ச்சி சவால்களைச் சமாளிப்பதற்கான வலையமைப்புகளை உருவாக்கவும் நிதியளித்துள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில் கல்வித் திட்ட முகாமையாளர்  ஹம்சி ஹனிஃப் ஐக்கியஇராஜ்ஜியத்தில் கல்விக்கான பயணத்தின் மூலம்  சிறந்ததைப் பெறுவதற்கான நுண்ணறிவினை வழங்குகிறார்.

இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில் பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வித் திட்ட முகாமையாளர்  ஹம்சிஹனிஃப் தலைமையிலான பல்வேறு வயது மற்றும் நிபுணத்துவத் துறைகளைச் சேர்ந்த பொதுநலவாய அறிஞர்களின் முன்னாள் மாணவர்களும், ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு செல்வதற்கு தயாராகவுள்ள  அறிஞர்கள் குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அறிஞர்கள் குழுவினர்  கடல்சார்  உயிரியல், பொருளாதாரம், பொதுக் கொள்கை, நிதி மற்றும் கணக்கியல் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதுகலை தகைமைகளைத் தொடர்கின்றனர். நிகழ்வின் போது, ​​பொதுநலவாய புலமைப்பரிசில் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பல்வேறு வளங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் குழு வழிநடத்தப்பட்டது. இந்த அமர்வானது விசா மற்றும் பயணம், இங்கிலாந்தில் குடியேறுதல் மற்றும் வாழ்க்கையை சரிசெய்தல், தங்குமிடம், நிதிகளை நிர்வகித்தல், பாதுகாப்பாக வாழ்வது, பாகுபாடுகளுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும்  உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை அறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கல்வியாளர்கள் மற்றும் சமூக வாழ்க்கையின் முழு அனுபவத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரிட்டிஷ் கவுன்சில் நிகழ்ச்சித் தலைவர் சஞ்சீவனி முனசிங்க

பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வித் திட்ட முகாமையாளர் ஹம்சிஹனிஃப் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு பேசுகையில் “இந்த ஆண்டு 65 ஆண்டுகளைக் கொண்டாடும் பொதுநலவாய புலமைப்பரிசில் இலங்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பொதுநலவாய புலமைப்பரிசில் பெற்றுச் சென்ற பழைய மாணவர்களில் 70% க்கும் அதிகமானோர் திரும்பி வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். 1,150 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இந்த பெறுமதியான புலமைப்பரிசில் நுழைவாயிலில் தேர்ச்சி பெற்றுள்ளதால், பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையில் பெரிய உயரங்களை அடையவும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் செய்துள்ளனர்.

கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தீப்தி விஜேசிங்க

பிரித்தானியாவின் அபெர்டீன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து முனைவர் பட்டத்தை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள  2024 ஆம் ஆண்டின் ஐந்து அறிஞர்களில் ஒருவரான அச்சினி வத்சலா பெர்னாண்டோ, தெரிவிக்கையில்  “எனது ஆராய்ச்சியானது ஐக்கிய இராஜ்ஜியத்திற்கும்  இலங்கைக்கும் இடையிலான அத்தியாவசிய மீன் வாழ்விட பண்புகள் பற்றியது. இரண்டு முக்கிய துறைகள் பற்றிய அறிவை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவும், அவற்றை இங்கு எனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் நகர திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் MScக்கான புலமைப்பரிசில் பெற்ற சந்துனி திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில், “இது எனது கல்விப் பயணத்தின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாகும். நீங்கள் நிலையான வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் பெறும் சிறந்த வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கு கற்ற  அறிவை மீளக் கொண்டு வருவதோடு, பல சர்வதேச நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் நான் எதிர்பார்க்கிறேன் .

2000 ஆம் ஆண்டு குழுவைச் சேர்ந்த சிரேஷ்ட அறிஞரான பேராசிரியர் ரமணீ விஜேசேகர, “நீங்கள் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த பலரைச் சந்திக்கும் வாய்ப்பினை இத்திட்டமானது ஏற்படுத்துகிறது, இது மிகவும் சிறந்ததாகும். வெவ்வேறு விடயங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் வெவ்வேறு உணவு வகைகளை ரசித்து உண்ணவும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும் ஐரோப்பாவிற்கு பயணம் செய்யுங்கள். வலையமைப்புகளுடன் இணைந்திருப்பது முக்கியம். நான் 2001 இல் சென்றேன், அங்கு நான் ஏற்படுத்திய சில இணைப்புகளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்.

பொதுநலவாய புலமைப்பரிசில் தொகைகள் ஐக்கிய இராஜ்ஜியத்தின்  வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி  அலுவலகத்தினால் (FCDO) ஆறு அபிவிருத்தி தொனிப்பொருளின்  கீழ் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் 2024 செப்டெம்பர்  10 ஆம் திகதி முதல் கோரப்படவுள்ளன. இலங்கைக்கான நியமன முகவரான  உயர்கல்வி அமைச்சின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். CSC இன் இணையத்தள  விண்ணப்ப முறையின் மூலம் பொதுநலவாய  பகிரப்பட்ட உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதுடன், பங்கேற்கும் ஐக்கிய இராஜ்ஜிய பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட  முதுகலை படிப்பை  தொடர்வதற்கு  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கைநெறிகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அவர்கள் பொதுநலவாயத்தின்  பகிரப்பட்ட உதவித்தொகையின் ஒரு வாய்ப்பை மட்டுமே ஏற்க முடியும். விண்ணப்பதாரர்கள் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்,  தேவைகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான விதிகள் குறித்த குறிப்பிட்ட ஆலோசனைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். பொதுவான தகுதித் தேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, cscuk.fcdo.gov.uk/apply/ ஐப் பார்வையிடவும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply