“எனது கனவை நனவாக்க என்னுடைய திறனை வளர்ப்பதற்கு உதவும் SLIIT” – 2020 உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற அமந்தி மதநாயக

Share with your friend

20 வயதுடைய அமந்தி மதநாயக எப்பொழுதும் வெற்றியை அடைவதில் நம்பிக்கையுடன் இருக்கின்றார். வர்த்தகத் துறையிலுள்ள நிபுணர்கள் உயர்ச்சிபெற புதிய கொள்கைகளைக் கொண்டுவரக்கூடிய துறைசார் விரிவுரையாளராக வேண்டும் என்பதே அவருடைய வாழ்நாள் இலக்காகும்.

இலச்சியத்தை அடைவதற்கான அவளுடைய பயணம் நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது. காலி சங்கமித்த பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியான இவர் மனசாட்சியுடன் படித்து க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றதுடன், 2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தப் பிரிவில் தோற்றி அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றார். உயர்தரப் பரீட்சையில் கணக்கீடு, வணிகக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் தனது திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அமந்தி அஹங்கம இம்மாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர் தற்பொழுது ஓய்வுபெற்றிருப்பதுடன், இதற்கு முன்னர் இம்மாதுவ பிரதேச செயலகத்தில் பணியாற்றியிருந்தனர். அமந்தியின் மூத்த சகோதரன் பொறியியல் துறையில் உயர்கல்வி கற்றுவருகின்றார். 

வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய அவர், வணிகத்தின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார். ”உயிரியல் மற்றும் கணிதத் துறைக்குச் செல்லுமாறு பலர் கூறினர். எனினும் அதற்கான விருப்பம் எனக்கு இருக்கவில்லை. வணிகத் துறையில் கற்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆர்வமாகும்” என அமந்தி குறிப்பிட்டார்.

”சிறிய இலக்கு ஒன்றை உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள் – நாளொன்றுக்கு சிறியதொரு வெற்றி. உதாரணமாக எனது பாடப் புத்தகங்களை வகைப்படுத்தி அவற்றில் குறிப்பிட்ட பாடத்தைப் பூர்த்தி செய்வதாக இலக்குவைத்துக் கொண்டு எப்படியாவது அந்நாளுக்குள் அதனைப் பூர்த்தி செய்வேன்” என பரீட்சைக்குக் கற்கும் மாணவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் பாடசாலையின் வெளிப்பாடவிதான செயற்பாடுகளில்  பள்ளியில் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது, ​​அவர் ஒருபோதும் சளைத்ததில்லை எனக் குறிப்பிடும் அவர், ”எனக்கு பிரதான குறிக்கோ் ஒன்ற இருந்தது, முதலில் நாடளாவிய ரீதியில் முதலாவது இடத்துக்கு வரவேண்டும், இதனை அடைவதற்கு எனது இலக்குகளை நாளாந்த இலக்குகளாகப் பிரித்துக்கொண்டேன்” என்கிறார்.

இன்று அமந்தியின் எதிர்காலம் வெற்றியடைய பலமான அத்திரவாத்தை SLIIT  வழங்குகிறது. SLIIT ஐ தெரிவுசெய்தது ஏன் என வினவியமைக்குப் பதிலளித்த அவர் குறிப்பிடுகையில், ”ஏனைய தனியார் பல்கலைக்கழகங்களில் எனக்கு இடம் கிடைத்தபோதும் நான் SLIIT ஐ தெரிவுசெய்தேன். நான் CODEFEST 2019 இற்கு விண்ணப்பித்து எனது குழுவுடன் அரை இறுதிக்கு வந்திருந்தேன். போட்டிக்காக மாலபே SLIIT கம்பஸுக்கு விஜயம் செய்திருந்தேன். இது எனக்கு சௌகரியமாக இருப்பதாக உணர்ந்ததுடன், பல்கலைக்கழகம் குறித்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கற்றல் மற்றும் கற்பித்தல் சூழல் விரும்பத் தக்க வகையிலும், சௌகரியமாகவும் இருக்கின்றன” என்றார்.

தற்பொழுது அமந்தி இல் நடைபெறவிருக்கும் பரீட்சைக்காகக் கற்று வருகின்றார். அவர் குறிப்பிடுகையில், ” SLIIT இல் எமக்கு ஆளமாக குறிப்புக்கள் வழங்கப்படுவதுடன், விரிவுரையாளர் கற்பிக்கும்போதும் நாம் குறிப்புக்களை எடுத்துக் கொள்வோம். இது எனக்கு சற்றுப் புதிதாக இருந்தாலும், நான் முன்னர் செய்ததைப் போன்று சிறிய இலக்குகளை உருவாக்கிக் கொண்டு எனது கற்றல் செயற்பாட்டை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றேன்.  இல் நான் விரும்புவது என்னவென்றால் வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் பட்டம் உள்ளது, இது இரண்டும் எனக்கு குறிப்பிடத்தக்க பாடங்களாக நான் கருதுகின்றேன்” என்றார்.

SLIIT தனது வாழ்க்கையில் பாரியதொரு திருப்புமுனையாக அமைந்தது என்பதை அங்கீகரிப்பதாக அமந்தி குறிப்பிடுகின்றார். ”எனது பாடசாலை வாழ்க்கையைவிட இங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் SLIIT கலாசாரம் முற்று முழுதாக வித்தியாசமானது என்பதுடன், அது எனக்குப் பிடித்துள்ளது. SLIIT என்னைத் தொடர்ந்தும் கற்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன், எனக்குக் கிடைக்கும் என நினைக்காத கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புக்களையும் இது வழங்குகிறது” எனத் தெரிவித்தார். அத்துடன், SLIITஇன்  பணியாளர்களும், கல்விசார் பணியாளர்களும் நட்புடன் பழகுவதுடன், எப்பொழுதும் உதவிசெய்பவர்களாக விளங்குகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


Share with your friend