ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் நாடு முழுவதும் உள்ள மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு (மத்தியஸ்தம்) 70 மடிக்கணினிகளை வழங்கியது

Share with your friend

ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்கும் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டமானது, நாடு முழுவதும் உள்ள மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் (மத்தியஸ்தம்) நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த 70 மடிக்கணினிகளை வழங்குவதன் மூலம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவிற்கு தனது ஆதரவை விரிவுபடுத்தியது. 

கௌரவ நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியநாத் பெரேரா, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் யாப்பா, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஆளுனர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் திரு லார்ஸ் பிரெடல்,  மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் மார்யா ரெஹ்மான் ஆகிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) என்பது ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இந்த யூரோ 7 மில்லியன் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து பகுதியினரையும் உள்வாங்கிய ஜனநாயகப் பங்கேற்பு (STRIDE) எனும் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

SEDR இன் பயன்விளைவுப் பரப்பு 4, தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதன் மூலம் மத்தியஸ்த சபைகளின் நிர்வாகச் செயல்பாட்டை ஆதரிக்கும் செயல்பாட்டை உள்ளடக்கியது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தரவுகளை தொகுத்து வழங்குவதை இலகுபடுத்தும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது. SEDR இன் பயன்விளைவுப் பரப்பு 1ன் கீழ், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் இணையதளத்தை மேம்படுத்துவதற்கும், மேலும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு சுமுகமாக செயல்படுவதற்கும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வகையிழும் மத்தியஸ்த தரவுத்தளத்தை உருவாக்குவதற்கும் குறிப்பிடத்தக்க பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இணையதளம் பொது விழிப்புணர்விற்கு உதவும், மற்றும் வழக்கு பேசுவதுடன் ஒப்பிடும் போது அதிக செலவு திறன் மற்றும் நிலையான மத்தியஸ்தத்திற்கான மிகவும் தேவையான அணுகலை அதிகரிக்கும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் திரு. லார்ஸ் பிரெடல், “அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் நிற்கிறது. நவீன சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்கல் பெருகிய முறையில் முக்கிய பங்கு வகிப்பதால், நீதித்துறையின் செயல்பாட்டிற்கு இது பொருத்தமானது, ஏனெனில் இது மேம்பட்ட அணுகல் மற்றும் நீதி சேவைகளை வழங்க அனுமதிக்கிறது. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு அதிகாரிகளின் பணியை எளிதாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த உபகரணங்களை வழங்குவது சாதகமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என கூறினார்.

2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், புதிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (மத்தியஸ்தம்) உட்பட 235 மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு ஊழியர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தேவைகள் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மேலும் SEDR ஆல் பணியமர்த்தப்பட்ட ஒரு ஆலோசகரால் பயிற்சி தேவைகள் பகுப்பாய்வும் செய்யப்பட்டது. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதி அமைச்சு மற்றும் SEDR கூட்டுக் குழுவினால், வழங்கப்பட வேண்டிய ICT உபகரணங்களின் நோக்கம் மற்றும் கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு, 70 மடிக்கணினிகளை வழங்குவதே சிறந்த வழி என்று தீர்மானிக்கப்பட்டது.


பிரிட்டிஷ் கவுன்சிலின் தகவல் தொழில்நுட்பக் குழு இந்த மடிக்கணினிகளில் மென்பொருளை (Windows10) நிறுவும் பணியை முடித்தது, மேலும் இவை அனைத்தும் SEDR வர்த்தக குறி மற்றும் லப்டொப் பைகளுடன் வழங்கப்படுகின்றன. இந்த மடிக்கணினிகளின் விநியோகச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, SEDR ஆனது மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சுடன் நெருங்கிய தொடர்பில் செயல்பட்டு, 70 புதிய பயனர்கள் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவி மற்றும் மென்பொருள் இரண்டிலிருந்தும் அதிகபட்ச பலனைப் பெற இயலுமாகும் வகையில்  ஒரு ஒன்லைன் அடிப்படை பயிற்சி அமர்வை வடிவமைத்து வழங்கும். மேலும், குறிப்பாக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் புதிய ஒன்லைன் மத்தியஸ்த தரவுத்தளத்தினை புதிய உபகரணங்களை கொண்டு எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தும், புதிய பயனர்களுக்கான கூடுதல் ஒன்லைன் பயிற்சி அமர்வையம் SEDR ஆதரிக்கும்.


Share with your friend