சர்வோதய அபிவிருத்தி நிதியம் மற்றும் Mitra Innovation ஆகியன சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கிய டிஜிட்டல் திறன்களை கட்டியெழுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன

Share with your friend

நெறிமுறைக்குட்பட்ட கடன் வழங்கலை நோக்கிய மாற்றத்திற்கான ஒரு வழிமுறையாக டிஜிட்டல் மயமாக்கலின் திறனைக் குறிப்பிட்டு, சர்வோதய அபிவிருத்தி நிதியம், கெத்சிரிகம கிராமத்தை பல டிஜிட்டல் தளங்களுடன் இணைக்க Mitra Innovation உடன் கைகோர்த்துள்ளது. அதன் மூலம் அக்கிராமத்தில் உள்ள மக்கள் தமது வணிகத்தை முன்னெடுப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை அடையப்பெறுவதற்கும் அவர்களின் திறனை மேம்படுத்துகிறது. Mitra Innovation உடனான கூட்டாண்மை விரிவான டிஜிட்டல் கற்றல் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதை நோக்கியதாக அமையும். இந்த செயற்திட்டம் கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கான பாரியதொரு முயற்சியின் ஒரு பகுதியாகும். இளைஞர், யுவதிகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களாக காலடியெடுத்து வைப்பதற்கான பாதைகளை இது உருவாக்குகிறது.

இலங்கையின் முன்னணி புத்தாக்க வணிக தீர்வுகள் உருவாக்குனர்களில் ஒன்றான Mitra Innovation, சரியான அளவிலான வளங்களுடன், சரியான விலையில், குறைந்த அபாயத்துடன் அடையப்பெறக்கூடிய தீர்வுகளை வழங்குகிறது. சிறந்த நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், வணிகத் தேவைகளை மூலோபாய, புத்தாக்கமான தீர்வுகளாக மாற்றுவதற்கும், வளர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கும், வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கும் பாதுகாப்பான உள்ளக மற்றும் வெளிப்புற ஒத்துழைப்பை நிறுவனம் பயன்படுத்துகிறது. பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் தளங்கள் மற்றும் அனைத்து வணிக மற்றும் அரச துறைகளிலும் நிபுணத்துவத்துடன், டிஜிட்டல் பயணத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களுக்கு உதவ Mitra Innovation உழைத்து வருகிறது.

இக்கூட்டாண்மையின் மூலமான முக்கியமான ஒரு பெறுபேறாக, நான்கு மாத கால வடிவமைப்பு பாடநெறியில் பல்வேறு இனங்களிலிருந்து கவனமாக பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளைஞர்,யுவதிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தச் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு, இரு நிறுவனங்களையும் சேர்ந்த 25 தன்னார்வத் தொண்டர்கள் அணியொன்று கல்விச் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அம்பாறைக்குச் சென்றுள்ளது. Mitra Innovation மத்தியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் அணியால் வழிநடத்தப்படும் பாடநெறியின் முக்கிய கூறுகளுக்கு முன்னதாக பன்னிரண்டு வார கால அறிமுக அமர்வுகளுடன் இந்த பாடநெறி ஆரம்பிக்கப்படும். நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவில், செயல்திறனின் அடிப்படையில், பத்து மாணவர்கள் Mitra Innovation இல் ஆறு மாத உள்ளகப் பயிற்சியில் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.

கெத்சிரிகம வாசிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் அவர்களுக்கு அறிவூட்டுவதற்குமான முயற்சிகள், இளைஞர்,யுவதிகளை வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பாதையில் கணிசமாக அளவில் வலுவூட்டுவதுடன், அவர்களின் விண்ணப்பங்களில் டிஜிட்டல் வடிவமைப்புத் திறனுக்கான சான்றுகளைச் சேர்ப்பது உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டு வருகிறது. கொழும்பில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற பொருளாதார மையங்களில் கிடைக்கும் பல இணைய வழி வேலை வாய்ப்புகளையும் இளைஞர்,யுவதிகள் இதன் மூலமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

டிஜிட்டல் அறிவூட்டல் முயற்சிக்கான கூட்டாண்மை மற்றும் ஆரம்பம் குறித்து சர்வோதய அபிவிருத்தி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிலாந்த ஜெயநெத்தி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல் மூலம் நெறிமுறைக்குட்பட்ட கடன் மற்றும் பொருளாதார அரவணைப்பு உள்ளடக்கத்தை முன்னெடுப்பதில் சர்வோதய அபிவிருத்தி நிதியம் எப்போதும் முக்கிய கவனம் செலுத்துகிறது. எனவே, அத்தகைய திறன்களைக் கட்டியெழுப்ப Mitra Innovation உடனான இக்கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

Mitra Innovation இன் இணை ஸ்தாபகரும், ஆசிய பிராந்தியத்திற்கான முகாமைத்துவப் பணிப்பாளருமான தம்மிக கனேகம அவர்கள் இந்த முயற்சி குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கையில், “உலகளவில் அதிகரித்து வரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தேவைக்கு மத்தியில், இலங்கையில் அதிக சம்பளத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு கொண்ட பணியாளர்களை உருவாக்கி, நமது இளைஞர்,யுவதிகளின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளதுடன், நேர்மறையான சமூக மாற்றத்தையும் இதனூடாக ஏற்படுத்த முடியும். சர்வோதய அபிவிருத்தி நிதியத்தின் கிராமப்புற வலையமைப்பின் பரவலான அடைவுமட்டம் மற்றும் அவர்களின் சமூகத்தை முன்னிலைப்படுத்திய சமூக நற்பயன் செயற்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சர்வோதய அபிவிருத்தி நிதியத்துடன் கைகோர்த்து இந்த தனித்துவமான செயற்திட்டத்தை முன்னெடுப்பதை மிகவும் பயனை ஏற்படுத்தும் ஒன்றாக Mitra கருதுகிறது,” என்று குறிப்பிட்டார்.


Share with your friend