“சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2021” இல் SLT-MOBITEL மூன்று விருதுகளை சுவீகரிப்பு

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2021 இல், சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 18ஆவது வருடாந்த சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2021 நிகழ்வில் மூன்று விருதுகளை குழுமம் தனதாக்கியிருந்தது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நவம்பர் 23 ஆம் திகதி இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

‘Sustainability Champion’ எனும் பிரிவில் SLT-MOBITEL உயர்ந்த ஸ்தானத்தை தனதாக்கியிருந்ததுடன், ‘Demonstrated Resilient Practices for COVID-19 Context’ பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. 2020 ஆம் ஆண்டில் கூட்டாண்மைகள் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கொவிட்-19 தொடர்பிலும் இந்த விருதுகள் வழங்கலில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தேசத்துக்கு மிகவும் சவால்கள் நிறைந்த காலமாக அமைந்திருந்த போதிலும், SLT-MOBITEL என்பது தொடர்ந்து தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக வியாபார செயன்முறைகளில் நிலைபேறாண்மையை பின்பற்றி, அதனூடாக பொருளாதாரம், ஆளுகை, சூழல் மற்றும் சமூகம் போன்றவற்றில் தனது பொறுப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான வியாபாரம் என்பதற்கான எமது அர்ப்பணிப்பு என்பது தந்திரோபாயத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், அதிகளவு அர்ப்பணிப்புடையது. கடந்த காலங்களில் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் எமது பணிகளை நாம் வலிமையுடன் முன்னெடுத்துள்ளதுடன், சூழல், சமூக மற்றும் கூட்டாண்மை பணிகளில் எமது நிலைபேறாண்மை அர்ப்பணிப்பை உறுதி செய்து செயலாற்றுகின்றோம். SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் நிலைபேறாண்மைக்கு முக்கியத்துவமளித்து, நவீன தலைமுறை தொழில்நுட்பங்களை செயற்படுத்த முன்வந்துள்ளதுடன், நிலைபேறான புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகளை நிறைவேற்றி, தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குகின்றோம். SLT நோக்கு 2022 என்பதற்கமைய நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க முனைவதுடன், எமது சிறந்த செயற்பாடுகளை தொடர்ந்து வழங்கவும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

இந்த ஆண்டின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட மதிப்பாய்வு விதிமுறையை வர்த்தக சம்மேளனம் பின்பற்றியிருந்ததுடன், அதனூடாக எதிர்பாராத விதமாக எழுந்துள்ள சவால்களுக்கு வியாபாரங்கள் எவ்வாறு முகங்கொடுத்து, தமது வியாபாரங்களை அவசர நிலைகளில் செயலாற்றுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தமை, மீண்டெழுந்தன்மை மற்றும் பங்காளர்கள் நிர்வாகம் போன்றன தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. சூழல், வாடிக்கையாளர் உறவுகள், சமூக உறவுகள், ஆளுகை, நிதிப் பெறுபேறுகள், பொருளாதார பங்களிப்பு மற்றும் விசேட நிலைபேறாண்மை செயற்திட்டங்கள் போன்ற பிரிவுகளில் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நிலைபேறான வியாபார செயன்முறைகள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் SLT-MOBITEL, இலங்கையில் fibre-to-the-home இணைப்பை வழங்கும் ஒரே நிறுவனமாகத் திகழ்கின்றது. பாரம்பரிய செப்புக் கம்பிகளுக்கு பதிலாக நவீன ஃபைபர் ஒப்டிக் கேபிள்களை இணைத்து, நாடு முழுவதிலும் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. SLT-MOBITEL இனால் முழுமையாக பாரம்பரிய செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய பணியாற்றும் வழிமுறைகள், சரியான உட்கட்டமைப்புகளை நிறுவுவதில் தமது ஆற்றலையும் உறுதியான செயற்பாடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்துவது மற்றும் தேசிய டிஜிட்டல் இலக்குகளை எய்துவது போன்றவற்றில் SLT-MOBTEL இன் சிறந்த செயற்பாடுகளுக்கு சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருதை வெற்றியீட்டியுள்ளமை மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.  தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால்களை தாங்கிக் கொள்வதற்கு பதிலாக, SLT-MOBITEL இனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழிகளில் தனது அர்ப்பணிப்புகளை உறுதி செய்திருந்ததுடன், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் மேம்படுத்த உதவுகின்றது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஆதரவளிப்பது, முன்கள சுகாதார பணியாளர்களை மேம்படுத்துவது மற்றும் தேசத்தை இணைப்பது போன்றவற்றுக்காக ரூ. 350 மில்லியனுக்கு அதிகமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

சூழலில் அக்கறை கொண்ட நிறுவனம் எனும் வகையில், ‘SLT-MOBITEL Green Premier League’ எனும் மர நடுகைத் திட்டத்தை Sri Lankan Premier League 2020 உடன் முன்னெடுத்திருந்தது. ஒவ்வொரு போட்டியின் போது வெற்றியீட்டிய அணி பெற்றுக் கொண்ட ஓட்டங்களுக்கு நிகரான மரக் கன்றுகளை கல்தொட்ட, பலாங்கொட பகுதியிலுள்ள ரஜவாக்க வனாந்தரப் பகுதியில் நாட்டியிருந்தது. இதனூடாக 4000 கன்றுகள் வெற்றிகரமாக நாட்டப்பட்டதுடன், வனாந்தர திணைக்களத்துடன் இணைந்து இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளை ஐக்கிய நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் பிரகாரம் முன்னெடுத்திருந்தது.

படம்இடமிருந்து: இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தவிசாளர் விஷ் கோவிந்தசாமி, SLT பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி, SLT பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க, இலங்கைக்கான நோர்வே தூதுவர் எச்.ஈ.ட்ரீன் ஜோரன்லி எஸ்கெடல் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தவிசாளர் துமிந்த ஹுலன்கமுவ ஆகியோர் காணப்படுகின்றனர்.


Share with your friend