இலங்கை பெருந்தோட்டத் தொழில்துறை மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்களுக்கான முதல் வகையான நிகழ்வாக கருதப்பட்ட ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ், அதன் ஆரம்ப முகாமைத்துவ கருத்தரங்கை நடத்தியது, இது வரலாற்று அண்மைக்கால சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அதன் தோட்டக் குழுக்களால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த புதிய புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை காட்சிப்படுத்தியது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/08/Hayleys-Plantations-creates-history-with-first-ever-Management-Symposium-for-estate-based-teams-1.jpg)
இந்த கருத்தரங்கு, கல்வித்துறை வட்டாரங்களில் உள்ள பொதுவான நடைமுறையாகும், இது Hayleys Plantation துறையின் மனிதவளப் பிரிவினால் 60 தோட்டங்கள் மற்றும் அதன் குழுக்கள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் உச்சக்கட்டமாகும். ஆராய்ச்சி சார்ந்த அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்து, உண்மையான அறிவியல் மற்றும் பொருளாதார முறைகளால் ஆதரிக்கப்படும் நிஜ உலக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தரவு மற்றும் விதிமுறைகளை தொகுக்க குழுக்கள் பணிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் Hayleys குழுமத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தொழில் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தனியார் துறை முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய கல்வியாளர் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவால் முக்கிய உரையொன்று நிகழ்த்தப்பட்டது.
எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக Hayleys Plantationஐப் பாராட்டி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் பெருநிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்ப முன்னோடிகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் மதிப்பைப் பற்றியும் பேராசிரியர் மராம்பே கருத்து தெரிவித்தார்.
“எங்கள் குழுக்கள் முன்னோடியில்லாத சவால்களுக்கு மத்தியில் தங்கள் சாதனைகளை நிரூபிக்கும் புத்தாக்கமான சிந்தனையின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டுகளை நாங்கள் கண்டிருக்கிறோம் – இது எங்கள் தொழில்துறையின் வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாகும். விஞ்ஞானம் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இந்த ஆய்வுகள் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலுக்கு மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை ஆதரிக்க முடியும், மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு அதனுடன் இணைந்திருக்க முடியும்,” என Hayleys Plantationஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
‘Innovative Business Thinking and Applications’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில், 3 நிறுவன மட்டத்திலான வெற்றியாளர்கள், Hayleys Plantation நிறுவனங்களில் இருந்து ஒருவர் மற்றும் ‘Best of the Best’ ஒட்டுமொத்த வெற்றியாளர்களுடன் சிறந்த 10 திட்டங்கள் / வெற்றிக் கதைகளை அங்கீகரித்தது. தொழிலாளர் மகிழ்ச்சி, தரம் அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, புத்தாக்கமான சூழல் நட்பு தீர்வுகள், நிலப் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் மற்றும் தேயிலை அறுவடை செய்பவர்களின் தொழில்முறையை அதிகரித்தல் போன்ற மூன்று அடிமட்ட பகுதிகளை உள்ளடக்கிய உயர் தாக்க முயற்சிகளுக்காக தோட்டக் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளுக்காக PIM சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகரும் ஆசிரிய உறுப்பினருமான Dr. சமந்த ரத்நாயக்க தலைமையிலான 7 நடுவர்கள் அடங்கிய குழு, மதிப்பு கூட்டும் திறன், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்தன.
Dunedin Skim Rubber Processing Factory இனால் அமைக்கப்பட்ட கழிவு நீர் முகாமைத்துவ முறையானது Kelani Valley Plantations PLCஆல் சிறந்த முறையில் வழங்கப்பட்ட திட்டமாக அங்கீகரிக்கப்பட்டதுடன், கருத்தரங்கில் ‘Best of the Best’ ஒட்டு மொத்த வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டது. புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு வெறும் ஐந்து வேலை நாட்களுக்குள் ROI மூலம் கழிவு நீர் உற்பத்தியின் பயன்பாட்டை பெருந்தோட்ட குழுவானது 50%ஆல் குறைத்தது.
தொழில்துறையில் இணையும் நபர்களுக்கு அதிக அறிவு-பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதற்காக, சிறந்த 10 சமர்ப்பிப்புகளின் கற்றல் அடங்கிய கருத்தரங்கு ஆராய்ச்சிக் கையேட்டின் பிரதிகள் கல்வியாளர்கள் மற்றும் தோட்டத் துறை பங்குதாரர்களுக்கு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.