CRIB – தரவுசார்ந்த தீர்வுகளின் மூலம் கடன் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல்

Share with your friend

CRIB இலங்கையின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் புஷ்பிக ஜெயசுந்தர அட்வொகட்டா நிறுவனம்(Advocata Institute) ஏற்பாடு செய்த இக்னைட் க்ரோத் 2025 மாநாட்டில் (Ignite Growth Conference 2025) நாட்டின் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் CRIB இன் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். “வலுவான கடன் உள்கட்டமைப்பு மூலம் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் பேசிய அவர் நம்பகமான கடன் தரவை சேகரித்து பரப்புவதன் மூலம் கடன் நிலைத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்வதில் CRIB மேற்கொள்ளும் முயற்சிகளை முன்னிலைப்படுத்தினார். தகவல் அசமத்தையைக் கையாளுவதன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களுக்கு கடன் பெறுவதில் ஏற்படும் தடைகளை அகற்றி CRIB கடன் அணுகுமுறையையும் உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவதாகக் கூறினார். மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி CRIB தரவுசார்ந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்தி நிதி துறையின் செயல்திறனை உயர்த்துகிறது.

இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் புஷ்பிக ஜெயசுந்தர அட்வொகட்டா இல் உரையாற்றினார்.

ஜெயசுந்தர வலுவான கடன் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப நிதி பற்றிய விழிப்புணர்வு முக்கியத்துவம் பெற்றதாக வலியுறுத்தினார் மற்றும் CRIB கடனாளிகளை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் என்பதே ஒரு தவறான புரிதல் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். CRIB தனிநபர்களை வகைப்படுத்தவில்லை மாறாக கடன் தகவல் இடைவெளிகளைக் குறைப்பதன் மூலம் பொறுப்பான கடனை எளிதாக்குகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார். கடந்த ஆண்டில் CRIB ஆனது நல்ல கடன் ஆரோக்கியத்தைப் பேணுவது மற்றும் www.crib.lk மூலம் அவர்களின் தனிப்பட்ட கடன் அறிக்கைகளை அணுகுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணரச் செய்வதன் மூலம் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தியுள்ளது. 

இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் புஷ்பிக ஜெயசுந்தர அட்வொகட்டா இன் கேள்வி பதில் அமர்வின் போது.

ஜெயசுந்தர குறிப்பாக நிதி வரலாறு இல்லாதவர்களுக்கு கடன் அணுகுமுறையை எளிதாக்க CRIB உறுதிபூண்டுள்ளதாக மறுபடியும் உறுதிப்படுத்தினார். இதற்காக தேசிய கடன் மதிப்பெண்ணுக்கு இணையாக MSME மதிப்பெண் அட்டையை அறிமுகப்படுத்தி கடன் மதிப்பீட்டில் பயன்படக்கூடிய மாற்று தரவுகளாக மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கொடுப்பனவுகளைச் சேர்ப்பதற்காக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்தத் தரவைப் பயன்படுத்துவதன் மூலம் CRIB தனிநபர்கள் சிறந்த வட்டி வீதங்கள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய அடமானம் தேவையில்லாமல் கடன்களுக்குத் தகுதிபெற உதவுகிறது. இந்த முயற்சி முறைசாரா கடன் வழங்குபவர்களை நம்பியிருப்பதைக் குறைத்து நியாயமான மற்றும் உள்ளடக்கிய நிதி அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “கடன் அணுகல் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. ஏனெனில் இது நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது” என்று ஜெயசுந்தர கூறினார். 

CRIB ஒவ்வொரு மாதமும் விரிவான கடன் தரவை செயலாக்குகிறது, அதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த 600 க்கும் மேற்பட்ட சரிபார்ப்பு மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டு CRIB ஒரு மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) தளத்திற்கு மாறி செயல்பாட்டு திறனை உயர்த்தியது. 2024 ஆம் ஆண்டில் அதன் டிஜிட்டல் உருமாற்ற உத்தியின் ஒரு பகுதியாக அதன் பெரும்பாலான சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியது. இந்த மாற்றம் கடன் தகவல்களை நிகழ்நேர அணுகலை வழங்கி நிதி முடிவுகளை மேம்படுத்துகிறது. CRIB கடன் மதிப்பெண் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இடர் மதிப்பீட்டுக் கருவி, கடன் வாங்குபவர்களை மிகவும் திறமையாகவும் மேம்படுத்தப்பட்ட விதிமுறைகளிலும் கடன் பெற இடமளிக்கிறது. 

இலங்கையின் SME துறையானது SME மதிப்பீட்டுக்கருவி மூலம் விரைவில் பயனடையும். இது பாரம்பரிய பிணை பாதுகாப்பு நிதியில்லாமல் வணிகங்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தரவைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கருவி ஒரு நற்பெயர் பெற்ற கடன் சுயவிவரத்தை SMEகளுக்கு நிதி நிறுவனங்களுக்கு சிறந்த அணுகலை வழங்கும். ஜெயசுந்தர பல இலங்கையாளர்களுக்கு கடன் வரலாறுகள் இல்லாமல் இருப்பதால் கடன்கள் பெறுவது கடினமாக இருக்கின்றது என்று தெரிவித்தார். நாட்டின் கடன் வழங்கும் முறை பெரும்பாலும் பாதுகாப்பு அடிப்படையிலானது ஆகையால் CRIB கடன் மதிப்பெண் போன்ற கருவிகளின் மூலம் கடன் தகுதியை முன்னிறுத்துவதற்கான முயற்சியில் உள்ளதாக கூறினார். இந்த அணுகுமுறை நிதி நிறுவனங்களுக்கு கடனாளிகளை கட்புலனாகும் சொத்துகளின் அடிப்படையில் அல்லாமல், நிதி பழக்கங்களைப் பெற்று மதிப்பிடுவதற்கான வாய்ப்பை வழங்கி கடன் அணுகலை மேம்படுத்துகிறது.

2024 ஆம் ஆண்டின் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் பதிவுச் சட்டம் எண். 17 இன் கீழ் மின்னணு பாதுகாப்பான பரிவர்த்தனைகள் பதிவேட்டை (STR) தொடங்குவது ஒரு முக்கிய படியாகும். இந்த அமைப்பு வணிகங்கள் இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள் போன்ற அசையும் சொத்துக்களை பிணையமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் மற்றும் கடன் வாய்ப்புகளை விரிவாக்கும்.  

ஜெயசுந்தர தனது உரையை முடிக்கையில் கேள்வி பதில் அமர்வுடன் முடித்தார். இதில் அவர் இலங்கையின் நிதி அமைப்பை புதுமைப்படுத்த CRIB இன் முயற்சிகள் பற்றி விவரித்தார். மேலும் கடன் மதிப்பெண்கள், வளர்ந்த நாடுகளில் கடன் வழங்கலுக்குச் சர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் கடன் மதிப்பெண்கள் இலங்கையில் சிறந்த நிதி பழக்கவழக்கங்களையும் ஊக்குவிக்கவும், சமூக நகர்வை மேம்படுத்தவும் உதவுமென்றும் அவர் குறிப்பிட்டார். 


Share with your friend