– SLTPB) பொறுப்பு வகித்து வருகிறது. நாட்டின் நற்பெயரை மேம்படுத்தி, உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பிரயாணிகளை ஈர்ப்பதை மேம்படுத்தும் பணிகளை SLTPB மேற்கொண்டு வருகிறது.


கொழும்பு, இலங்கை – 25 ஜுன் 2025 – மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் மாநாடு மூன்றாவது முறையாகவும் இடம்பெறவுள்ளமை குறித்து இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (Digital Marketing Association of Sri Lanka – DMASL) பெருமையுடன் அறிவித்துள்ளது. இவ்வாண்டில் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்திற்கு இது உத்தரவாதமளிப்பதுடன், முதற்தடவையாக சர்வதேச பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளமை முக்கியமான சாதனையாக மாறியுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு இவ்விரிவாக்கம் வழிவகுத்துள்ளதுடன், தெற்காசியாவில் முதன்மையான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஒன்றுகூடல் என்ற அந்தஸ்தையும் வலுப்படுத்துவதற்கு இந்த மாநாட்டுக்கு உதவியுள்ளது.
DMASL டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வுக்கான பதிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் முற்கூட்டியே பதிவு செய்வோருக்கு விசேட தள்ளுபடிகளும் வழங்கப்படவுள்ளன. இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகம் இந்நிகழ்விற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளமை, பல்வேறுபட்ட சர்வதேச விருந்தினர்களை ஈர்ப்பதில் இந்நிகழ்வின் மதிப்பு மற்றும் ஆதரவு முயற்சிகளையும் வலுப்படுத்தியுள்ளது.
“டிஜிட்டல் ஆசியாவின் எழுச்சி” (Rise of Digital Asia) என்ற முக்கியமான கருப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள DMASL டிஜிட்டல் மாநாடு 2025, தெற்காசியாவின் திறமைசாலி புத்திஜீவிகள், தொழிற்துறை தலைவர்கள், மற்றும் டிஜிட்டல் புத்தாக்குனர்களை ஒரே மேடையில் அமரச் செய்யும் முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது. உத்வேகமளித்து, ஒத்துழைப்பை வளர்த்து, மற்றும் பிராந்தியத்தில் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். தெற்காசியாவின் முதன்மையான டிஜிட்டல் மாநாடு என்ற ரீதியில், எல்லைகளைத் தகர்த்து, படைப்பாற்றலைத் தூண்டி, டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் எதிர்காலத்தைச் செதுக்குவதில் பிராந்தியத்தின் மத்தியிலுள்ள தீர்க்கதரிசனம் மிக்க புத்திஜீவிகளுக்கு வலுவூட்டவுள்ளது. இங்குதான் தெற்காசியாவின் டிஜிட்டல் நாடித்துடிப்பு உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது, மாநாட்டை ஒரு உண்மையான பிராந்திய சக்தி மையமாக நிலைநிறுத்துகிறது.
பிரதான உரைகள், ஆழமான அறிவை வெளிக்கொண்டு வரும் குழு மட்ட கலந்துரையாடல்கள், மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் அதிநவீன போக்குகள் மற்றும் புத்தாக்கங்கள் குறித்த நவீன நுண்ணறிவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயலமர்வுகள் என வலுவான நிகழ்ச்சிநிரலை இதில் பங்குபற்றவுள்ளவர்கள் எதிர்பார்க்க முடியும். டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வல்லுனர்கள், விளம்பர முகவர் நிறுவனங்கள், வர்த்தகத் துறை தலைவர்கள், மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் என பரந்துபட்ட தொழில்துறை வல்லுனர்களை இந்த மாநாடு ஒரே மேடையில் இடம்பெறச் செய்து, கற்றல், தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளுதல், மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான சூழலை வளர்க்கும். பேச்சாளர்கள், கூட்டாளர்கள், மற்றும் முழுமையான நிகழ்ச்சிநிரல் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த மாநாடு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறும்.
“இலங்கை டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வானது இலட்சியம் குறித்த துணிச்சலான பிரகடனமாக அமையப்பெற்றுள்ளது. டிஜிட்டல் முதலிடம் வகிக்கும் உலகில் சந்தைப்படுத்தலின் மையமாக இலங்கை வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், மாற்றத்தைத் தூண்டி, தொடர்புகளை கட்டியெழுப்பி, வர்த்தகநாமம், உள்ளடக்கம், மற்றும் டிஜிட்டல் ஊடக புத்தாக்கம் ஆகியவற்றில் நாட்டில் வளர்ச்சி கண்டு வருகின்ற தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கு ஆசியாவின் முன்னணி சிந்தனையாளர்களை இந்த உச்சி மாநாடு ஒன்றுபடுத்துகிறது,” என்று இலங்கை டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வின் இணைத் தலைமையாளர்களான காயத்ரி செனவிரட்ண மற்றும் ஷலேந்திர மென்டிஸ் ஆகியோர் குறிப்பிட்டனர்.
“DMASL டிஜிட்டல் மாநாடு உண்மையில் பிராந்திய மேடையாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளதைக் காண்பது மிகவும் பெருமையளிக்கின்றது. தேசிய முயற்சியாக ஆரம்பித்து இது தற்போது, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால், டிஜிட்டல் புத்தாக்கத்தின் கலங்கரைவிளக்காக வளர்ச்சி கண்டுள்ளது. முதல்முறையாக சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்கின்றமை DMASL க்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமை சேர்ப்பிக்கும் ஒரு தருணமாகும். எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் இடமாக இம்மாநாடு அமைந்துள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிராந்தியத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தைச் செதுக்குவோம்,” என்று இலங்கை இலங்கை சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைவர் அர்ஜுன் ஜெகர் அவர்கள் குறிப்பிட்டார்.
“DMASL டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வின் தலைமை அனுசரணையாளர்களாக கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். டிஜிட்டலின் ஆற்றல் என்பது வெறுமனே நுகர்வோரை எட்டுவது மாத்திரமன்றி, எங்கள் விரும்பத்தக்க வர்த்தகநாமங்களுக்கு தவிர்க்க முடியாத மேன்மையை முன்னெடுக்க கலாச்சாரம் மற்றும் சமூகங்களுடன் உண்மையிலேயே இணைந்திருப்பதாகும் என்பதில் யூனிலீவர் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. டிஜிட்டல்ரீதியாக வலுவூட்டப்பட்டுள்ள தெற்காசியாவைச் செதுக்குவதில் முக்கியமானதொரு படியாக இந்த மாநாடு அமைந்துள்ளதுடன், இப்பயணத்திற்கு பங்களிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்,” என்று யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஊடகம் மற்றும் விளம்பர செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி சமிந்த சமரக்கோன் அவர்கள் குறிப்பிட்டார்.
DMASL டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வின் தலைமை அனுசரணையாளர்களாக யூனிலீவர் செயற்படவுள்ளமை குறித்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் சிந்தனைச் சிற்பிகள் உள்ளிட்ட மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் பலரும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளதுடன், அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு, https://dmaslsummit.com/ ஐப் பார்வையிடவும்.