• முதலாவது தேசிய மட்ட புகையிரத ஆசனப் பதிவு கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது
• SLT-MOBITEL mCash ஊடாக இலங்கையில் முதன் முறையாக இலங்கை புகையிரதத் திணைக்களத்துக்கு LANKAQR செயற்படுத்தப்பட்ட தீர்வுகளை வழங்கி வலுவூட்டியுள்ளது
ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கை புகையிரத சேவையின் தொழில்நுட்பப் பங்காளர் எனும் வகையில், SLT-MOBITEL மற்றும் இலங்கை புகையிரத சேவை ஆகியன மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனையை 2022 மார்ச் 21 ஆம் திகதி ஏற்படுத்தியிருந்தன. புகையிரதப் பயணிகளுக்கு தமது பயண ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் இணையத்தளம் மற்றும் மொபைல் app ஆகியவற்றை இலங்கையில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளன.
இந்த நவீன வசதிகள் படைத்த முற்பதிவு முறையினூடாக வாடிக்கையாளர்களுக்கு https://seatreservation.railway.gov.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து அல்லது இலங்கை புகையிரத திணைக்களத்தின் முற்பதிவு மொபைல் App இல் பிரவேசித்து தமக்கு அவசியமான ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும். தேசிய போக்குவரத்து சேவை வழங்குநர் எனும் வகையில், இலங்கை புகையிரத திணைக்களத்தினால் பயணிகளுக்கு சிறந்த பிரயாண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எப்போதும் முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் SLT-MOBITEL உடன் இணைந்து “ஒன்லைன் ஆசன முன் பதிவுக் கட்டமைப்பு” அறிமுகத்தினூடாக, நவீன தொழில்நுட்ப பிரயாண வசதிகளிலமைந்த பிரயாணத்தை வழங்குவதை உறுதி செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் தேசிய மட்ட புகையிரத ஆசனப் பதிவு கட்டமைப்பொன்றை நிறுவிய முதலாவது சேவை வழங்குநராக SLT-MOBITEL மொபைல் திகழ்கின்றது. புதிய சேவையினூடாக, பொது மக்களுக்கு தமது புகையிரதப் பயண ஆசன முற்பதிவுகளை எங்கிருந்தும் எவ்வேளையிலும் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
SLT-MOBITEL மொபைல் இனால் இந்தக் கட்டமைப்பு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தொலைபேசி ஊடாகவும், சேவை வழங்கும் கருமபீடங்களினூடாகவும் புகையிரத பிரயாண முற்பதிவு முறையை புகையிரத பயணிகளுக்கு பெற்றுக் கொள்ள முடிந்தது. அத்துடன், இலங்கை புகையிரத திணைக்களத்துக்கும் ஆளியக்கக் கட்டுப்பாட்டு முறையிலும் சீராக்கல் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு உதவியிருந்தது. நாடு முழுவதிலும் சகல பகுதிகளையும் சேர்ந்த 50க்கும் அதிகமான புகையிரத நிலையங்களை இணைக்கும் வகையில் தன்னியக்கமயமான புகையிரத டிக்கட் முற்பதிவு கட்டமைப்பு அமைந்துள்ளது.
இலங்கையில் இலங்கை புகையிரதத் திணைக்களம் போன்ற பொது நிறுவனமொன்று LANKAQR ஐ பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கத்தை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளமை இது முதன் முறையாக அமைந்திருப்பதுடன், இது இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும், வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு இலகுவானதாகவும் அமைந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது விரல் நுனிகளினூடாக பயண டிக்கட்களை இலகுவாக முற்பதிவு செய்து கொள்ள முடியும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள QR குறியீட்டு உறுதிப்படுத்தலுடனான e-டிக்கட்கள் விநியோகத்தைக் கொண்டதாக இந்த கட்டமைப்பு அமைந்துள்ளதுடன், இதனூடாக இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு கடதாசி பாவனையற்ற பிரிவாக இயங்குவதற்கு வழிகோலும். முற்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட சகல 1ஆம் வகுப்பு ஆசனங்கள், பார்வையிடல் பெட்டி, 2ஆம் வகுப்பு, 3ஆம் வகுப்பு ஆசனங்களை சகல பகுதிகளுக்கு பிரயாணம் செய்வதற்காக சில நிமிடங்களில் பதிவு செய்து கொள்ளலாம். கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், Visa, MasterCard மற்றும் LankaQR ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முடியும். முற்பதிவு செய்யப்பட்ட டிக்கட்களை அருகாமையிலுள்ள mTicketing சேவையை கொண்டிருககும் புகையிரத நிலையத்திலிருந்து, உங்கள் ஆசன பதிவு குறியீட்டு இலக்கத்தை தெரிவித்து தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை காண்பித்து முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குநர் எனும் வகையில் தேசிய மட்ட செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் பெருமளவு முன்னுரிமை வழங்குவதுடன், இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி, நாட்டுக்கு சேமிப்புகளை ஏற்படுத்தி, அதன் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்றது.
SLT-MOBITEL இனால் வலுவூட்டப்பட்ட இலங்கை புகையிரத சேவையின் இணையத் தளம் மற்றும் மொபைல் App ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் திலும் அமுனுகம அறிமுகம் செய்வதையும், அருகில் மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத், போக்குவரத்துத் துறை அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க, இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மற்றும் இலங்கை புகையிரத சேவையின் வணிக பிரதி பொது முகாமையாளர் வி எஸ் பொல்வத்தகே ஆகியோர் காணப்படுகின்றனர்.
இலங்கை புகையிரத சேவையின் இணையத் தளம் மற்றும் மொபைல் App ஆகியவற்றின் அறிமுக நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் ஆகியோர் காணப்படுகின்றனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்துத் துறை அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க, இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர, மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத், இலங்கை புகையிரத சேவையின் வணிக பிரதி பொது முகாமையாளர் வி எஸ் பொல்வத்தகே மற்றும் மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம தகவல் அதிகாரி சமன் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.