SLT-MOBITEL வாடிக்கையாளர் தொடர்பு நிலையத்துக்கு ஆசியாவில் முதன் முறையாக ISO 18295-1:2017சான்று வழங்கி கௌரவிப்பு

Share with your friend

தர முகாமைத்துவ நியமங்களுக்காக ISO 9001:2015 சான்றும் வழங்கப்பட்டுள்ளது

சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL இன் வாடிக்கையாளர் தொடர்பு நிலையத்தின் (CCC) செயற்பாடுகளுக்கு ஆசியாவின் சர்வதேச ISO 18295-1:2017 தரச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், SLT-MOBITEL க்கு வாடிக்கையாளரின் கண்டிப்பான மற்றும் ஒழுங்குபடுத்தல் நியமங்களை பூர்த்தி செய்யும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமைக்காக ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. 

ISO 18295-1:2017 என்பது CCC உடன் எந்தவொரு தொடர்பாடலையும் பேணுவதற்கு அவசியமான தேவைப்பாடுகள் மற்றும் நியமங்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. வினைத்திறன் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை உருவாக்குவதற்கு இந்த நியமம் பங்களிப்பு வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு அவர்களின் தேவைகளை தொடர்ந்தும் நிவர்த்தி செய்வதற்கு அல்லது விஞ்சுவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த கௌரவிப்பு தொடர்பில் மொபிடெல் பிரைவட் லிமிடெட் வாடிக்கையாளர் பராமரிப்பு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஜீன் பெர்னான்டஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆசியாவில் முதன் முறையாக ISO 18295-1:2017 சான்றைப் பெற்ற மொபைல் வலையமைப்பாக திகழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமது நிபுணத்துவம் மற்றும் ஒப்பற்ற அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு கிடைத்த எடுத்துக் காட்டாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளதுடன், உயர் சர்வதேச நியமங்களை எய்துவதற்காக வளர்ச்சியடைந்து எமது செயன்முறைகளையும் சேவைகளையும் மேம்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் எமது பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கு சேவைகளை வழங்க நாம் முயற்சி செய்வதுடன், உள்நாட்டு அம்சத்தை தக்க வைத்த வண்ணம், சர்வதேச மட்ட சேவைகளை எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சேவை அனுபவத்துடன் பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக உள்ளது.” என்றார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியிலும் தங்கியிருக்கக்கூடிய மற்றும் தொடர்ச்சியான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்த SLT-MOBITEL, வாடிக்கையாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் முன்கள சேவைகளை வழங்கியிருந்ததுடன், வியாபார தொடர்ச்சித் தன்மையை பேணுவதிலும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.  நிறுவனத்தினால் விரைவில் மொபைல் அழைப்பு நிலைய கொள்கை முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், அதனூடாக முன்கள ஊழியர்களுக்கு தமது வீடுகளிலிருந்தவாறு வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு வினைத்திறன் வாய்ந்த வகையில் பதிலளிப்புகளை வழங்க ஏதுவாக இருந்தது.

Bureau Veritas லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கையின் பொது முகாமையாளர் ஷான் நானயக்கார, மொபிடெலுக்கு இந்த சான்றுகளை வழங்கியிருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “உயர் வினைத்திறன் வாய்ந்த வியாபாரங்களின் வெற்றிகரமான செயற்பாட்டின் அடித்தளமாக தர முகாமைத்துவம் அமைந்துள்ளது. தேசிய பிரசன்னத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களால் தொடர்ச்சியாக தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பாக சூழலுக்கு போட்டிகரமான வகையில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர் தன்னிறைவை மேம்படுத்துவது, நிறுவன வினைத்திறனை ஊக்குவிப்பது மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தலை எய்துவதற்கான அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக துறையில் அதன் தலைமைத்துவத்தை பேணி தரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மொபிடெல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது.” என்றார். 

மற்றுமொரு மைல்கல்லை பதிவு செய்திருந்த SLT-MOBITEL மொபைல் தரத்தின் மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்து ISO 9001:2015 மீளாய்வு செயன்முறையை பூர்த்தி செய்திருந்ததுடன், இந்தச் சான்றையும் பெற்றுக் கொண்டது. இந்தச் சான்றினூடாக,  SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தன்னிறைவு உறுதி செய்யப்படுவதுடன், முறையான ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

SLT-MOBITEL ஐ பொறுத்தமட்டில் இந்த பெருமைக்குரிய சான்றிதழ்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான மேம்படுத்தல்களை வழங்க ஏதுவாக உள்ளதுடன், இறுதி இலக்கான ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது.


Share with your friend